சென்னை மாநகர காவல்துறையின் குட்டு வெளியாகி உள்ளது.
வங்கிக் கொள்ளையர்களை சுட்டுப் பிடித்ததாகவும், அவர்கள் பீகாரைச் சேர்ந்த வினோத் குமார், சந்திரி காரே, வினய் பிரசாத் அபய் குமார் மற்றும் ஹரீஷ் குமார் என்று மாநகர காவல் ஆணையாளர் திரிபாதி இன்று அறிவித்தார். இவற்றில் பீகாரைச் சேர்ந்த சந்திரி காரே என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. இந்த சந்திரி காரே த/பெ திரிபாலி காரே, மஞ்சிபூர், பட்டோட் மாவட்டம், பாட்னா, பீஹார் என்பவர், பீகார் மாநிலத்தில் தற்போது லாரி ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்று திரிபாதி நேற்று கூறிய அபய் குமார் என்ற பெயரில் அந்த முகவரியில் ஒருவருமே இல்லை என்பதும் வெளியாகியிருக்கிறது. யாரென்றே தெரியாமல் சுட்டு விட்டு தவறான அடையாளத்தையும் அளித்த திரிபாதி இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?
0 comments:
Post a Comment