தன்னால் கற்க முடியாமல்போன கல் வியைத் தமிழகத்தின் தலை முறைகள் கற்பதற்கு வழியமைத்தவர் பெருந் தலைவர் காமராஜர். தான் கற்ற கல் வியையும் அதன் மூலம் பெற்ற அறி வையும் தமிழகத் தின் தலைமுறைகள் நலன் பெற பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா.
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி முதன்முதலில் அந்த மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்றிய து என்றால் அது அண்ணா தலைமையி லான திராவிட முன்னேற்றக் கழகம் தான். 1967ல் ஆட்சிக்கு வந்த அண்ணா, ஓராண்டு பத்து மாதங்கள் மட்டுமே முதலமைச்சராக இருந்தார்.
1969 பிப்ரவரி 3ஆம் நாள் அண்ணா மறைந்தபோது அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்குச் சாதனைமிகு எண் ணிக்கையாக அமைந்தது.
அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார். இவர்களுக்குப் பிள்ளை கள் கிடையாது. அண்ணா தனது அக்காள் மகள் சௌந்தரி யின் பிள்ளை களான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந் திரன் ஆகியோரை வளர்ப்பு மகன்களாக்கிக்கொண்டார்.
தமிழகத்தின் மிகப்பெரும் தலைவராக வும், முதல்வராகவும் இருந்த அண்ணா வுக்குச் சொந்தமான சொத்துகள் என்றால் காஞ்சிபுரத்தில் ஒரு வீடு. ஒரு ஏக்கர் நிலம். சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் ஒரு வீடு ஆகியவையாகும். அண்ணா முதல்வரானதும் அரசு அதி காரிகள் அவரது வீட்டில் கொண்டு வந்து வை த்த ஃப்ரிட்ஜ், சோபா செட்டுகள் ஆகிய வற்றை அப்புறப்படுத்தச் சொல்லிவிட் டார். அண்ணா மறைந்தபோது அவர் சேமித்து வைத்த தொகை என்பது நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கிக் கிளையில் 5000 ரூபாயும், மயிலாப்பூர் இந்தியன் வங்கிக் கிளையில் 5000 ரூபாயும்தான்.
தனது குடும்பத்தினருக்கு அரசியலில் பதவி எதையும் அண்ணா தர வில்லை. அவரது குடும்பத்தினர்கள் அரசியலிலோ அரசாங்கத்தி லோ பொறுப்புகளை எதிர்பார்க்கவில் லை. கலைஞர், எம்.ஜி.ஆர். போன்றவர்கள் அண்ணா குடும்பத்தின ருக்குப் பொறுப்புகளைக் கொடுக்க முன் வந்த போது கூட அண்ணாவின் வளர்ப்புப் பிள்ளைகள், அதனை இயக்க த்தில் வேறு யாருக் கேனும் கொடுங்கள் என்று சொன்ன நிகழ்வுகள் உண்டு. அண்ணா வின் துணைவியார் ராணி அம்மையார் சட்டமேலவை உறுப்பினராக எம்.எல்.சி.) கலைஞர் ஆட்சியின்போது இருந்திருக்கிறார். அண்ணாவின் நூல் களை செல்வி. ஜெயலலிதா அரசு நாட்டுடைமை யாக்கி அவரது குடும்பத் தாருக்கு 75 லட்ச ரூபாய் வழங்கியது. அண்ணா நூற்றா ண்டை யொட்டி (2009) அண்ணா வின் வளர்ப்பு மகன்களின் குடும்ப ங்களு க்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கியது கலைஞர் அரசு.
பரிமளத்தின் மனைவி சரோஜா பரிமளம். இத் தம்பதியரின் மூத்த மகன் மலர்வண்ணன், மலர் அச்சகம் நடத்தி வருகிறார். அவருடைய துணைவியார் ஜெயஸ்ரீ பாலர் பள்ளி நடத்தி வருகிறார். இவர் களுக்கு அகிலன், ஆதித்யன் என்ற இரு மகன்கள். பள்ளியில் படித்து வருகிறார்கள். டாக்டர் பரிமளம்-சரோஜா தம்பதி யரின் மகள் இளவரசி. இவரது கணவர் முத்துக்குமார் வணிகத்தில் ஈடுபட்டுள் ளார். இவர்க ளுடைய மகள்கள் சுருதி, ப்ரீத்தி ஆகியோர் பள்ளியில் பயின்று வருகிறார்கள். பரி மளம்-சரோஜா தம்பதியரின் இரண்டா வது மகன் அ.ப.சௌமியன் கட்டுமானத் தொழி லில் ஈடுபட்டுள்ளார். இவரது துணைவியா ர் பெயர் சரளா. இத்தம்பதியருக்கு அரவிந்த், அர்ஜூன் என இரு மகன்கள். இவர்கள் பள்ளிப்படிப்பு பயில்கிறார்கள்.
சி.என்.ஏ.கௌதமன். இவர் அண்ணா வளர்த்த மூன்றாவது மகன். நூல் வெளியீடு மற்றும் அச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது துணைவியார் துளசி கௌதமன் காலமாகிவிட்டார். இத்தம்பதி யரின் மகள் சரிதா. இவரது கணவர் சிவக்குமார். இத்தம் பதியருக்கு ப்ரித்வின் என்ற மகன் உள்ளார்.
அரசியலில் ஆர்வம் செலுத்தாமல் அண்ணா குடும் பத்தினர் தங்க ளுக்கு விருப்பமான துறைகளில் பணி யாற்றி வருகின்றனர். அண் ணாவுக்குப் பிறகு அரசிய லுக்கும் ஆட்சிக்கும் வந்தவர்கள் அண்ணா குடும்பத் தினரைப் புறக்கணித்துவிட்டனர் என்றெல்லாம் அரசியல் தளங் களில் விமர்சனம் எழுகின்ற போதும், அண்ணா குடும்பத்தினர் அரசியல் இயக்கங்களிடமிருந்தோ ஆட்சியாளர்களிடமிருந்தோ எதிர் பார்ப்பதில்லை. தங்களுக்குக் கிடைக்கும் வருவாயைக் கொ ண்டு வாழ்வதிலேயே மகிழ்வும் பெருமையும் கொள்கிறார்கள்.
0 comments:
Post a Comment