March 11: சங்கரன்கோவில் தொகுதியில் 20 கிராமங்கள் அதிக பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப் பட்டுள்ளன. இதையொட்டி கூடுதலாக 16 செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் 18ம் தேதி நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 242 வாக்குச்சாவடிகள் 118 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர். மேலும் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவம் நாளை வருகிறது.
சிந்திக்கவும்: உலக நாடுகளில் தேர்தல் என்றால் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நடக்கும் மக்கள் சந்தோசமாக வாக்களிப்பர். இந்தியாவில் என்னவென்றால் தேர்தல் என்றால் ஏதோ போர் நடப்பது போல் இருக்கிறது. ஏன்தான் தேர்தல் வருகிறதோ என்று மக்கள் அஞ்சும் அளவுக்கு ஒரு போர்க்காலம் போல் தேர்தல் காட்சி தருகிறது.
சிந்திக்கவும்: உலக நாடுகளில் தேர்தல் என்றால் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நடக்கும் மக்கள் சந்தோசமாக வாக்களிப்பர். இந்தியாவில் என்னவென்றால் தேர்தல் என்றால் ஏதோ போர் நடப்பது போல் இருக்கிறது. ஏன்தான் தேர்தல் வருகிறதோ என்று மக்கள் அஞ்சும் அளவுக்கு ஒரு போர்க்காலம் போல் தேர்தல் காட்சி தருகிறது.
சிறப்பு காவல்படைகலாம், இராணுவமாம், செக் போஸ்டுகலாம், என்ன நடக்கிறது இந்த நாட்டில். கோடிக்கணக்கில் மக்கள் வரி பணத்தை செலவழித்து நடத்தப்படும் தேர்தலின் மூலம் உருவாகும் அரசுகளை கவிழ்ப்பது, கட்சி விட்டு கட்சிதாவுவது, ரவுடிகளை வைத்து அரசியல் நடத்துவது என்று இவர்கள் போடும் ஜனநாயக கூத்துகளுக்கு அளவே இல்லை.
மதவாதம், ரவுடிசம், ஊழல், ஜாதி, போன்றவற்றின் மூலம் தேர்தல் களத்தை போர்களமாக மாற்றும்நடத்தும் கட்சிகளையும், அதற்க்கு துணைபோகும் ரவுடிகளையும், அரசு அதிகாரிகளையும், கட்சி பொறுப்பாளர்களையும் மீதும் பாரபட்சம் இல்லாமல் காடுமையான் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
0 comments:
Post a Comment