உண்மைசுடும்

Friday, 25 January 2013

விஸ்வரூபத்தின் விஸ்வரூபம் (காணொளி)


நாளை பாண்டி பஜாருக்கு விஸ்வரூபம் திருட்டு வி.சி.டி வந்துவிடும் என்ன செய்யப்போகிறீர்கள்..?
kamal rajini This video is for the Vishwaroopam protestersதியேட்டரில் பார்த்தால் மட்டும் களங்கம் திருட்டு வி.சி.டியில் பார்த்தால் களங்கமில்லையா..?
இன்று அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் விஸ்வரூபம் வெளிவருகிறது, என்றால் என்ன அர்த்தம்..?
நாளை விடிந்தால் பாண்டி பஜாருக்கு விஸ்வரூபம் திருட்டு வி.சி.டி வந்துவிடும், எப்படித் தடுக்கப் போகிறது தமிழக அரசு..?
சொற்ப நேரத்தில் இணையத்தில் முழுமையான திரைப்படமும் திருட்டுத் தனமாக தரவேற்றம் செய்யப்பட்டுவிட வாய்ப்புள்ளது..
இஸ்லாமிய அமைப்பக்களின் மனம் திருட்டு வி.சி.டியாலும், திருட்டு இணைய வெளியீட்டாலும் புண்படாது.. தியேட்டரில் காண்பித்தால் மட்டும்தானா புண்படும:..? நெஞ்சைத் தொட்டு இந்தக் கேள்வியைக் கேட்க தமிழகத்தில் ஒரு நாதி இல்லாத காரணத்தால் வெளி நாட்டிலிருந்து நாம் கேட்கிறோம்..
விஸ்வரூபத்தை தடுக்க முன் இஸ்லாமிய சகோதர அமைப்புக்களும், அவர்களுடைய பேச்சைக் கேட்டு முடிவெடுத்த தமிழக முதல்வரும் இந்த இரண்டு கேள்விக்கும் விடை தேடியிருக்க வேண்டும்.
மனச்சாட்சிப்படி சரியான பதிலை கண்டுவிட்டு திரைப்படத்தை நிறுத்த முன் வந்திருக்க வேண்டும்..
இன்று திரைப்பட வர்த்தகம் என்பது வெள்ளி, சனி, ஞாயிறு என்று மூன்று நாட்களுக்குள் நடந்து முடியும் வர்த்தகமாகிவிட்டது, தாமதித்தால் திங்கள் திருட்டு வி.சி.டி வந்துவிடும், அதனால்தான் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் ஒரே நேரத்தில் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.
இப்படியிருக்க தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட கடைசி நேர தடையால் கமலுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதைத் தவிர வேறு என்ன இலாபம் கிடைத்துள்ளது என்று கேட்டால் பதில் பூஜ்ஜியமே..
முன்னையை விட அதிகமானவர்கள் திருட்டு வி.சி.டியில் விஸ்வரூபத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறார்கள், கடைசியில் யானை தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்ட வேலையைத்தான் தமிழக அரசு செய்ததாக முடிந்திருக்கிறது.
ரஜினி வெளியிட்ட அறிக்கையில் செலவான பணம் தனது நெஞ்சை நடுங்க வைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கமலின் காரியாலயத்திற்கு படையெடுக்கும் கந்து வட்டிக்காரர் பற்றிய செய்தியைத்தான் அவருடைய நடுக்கம் தெரிவிக்கிறது போலும்..
100 கோடிக்கு நாளாந்த கந்துவட்டி என்ன.. அந்த வட்டி தாமதமாவதால் பெருகும் கடப்பாரை வட்டி என்ன..?
இப்படியான திரைப்பட வெளியீடு ஒரு நாள் தாமதித்தாலே போதும் விட்ட பணம் காற்றில் மாயமாகிவிடும்.
இது தெரியாதது போல ஒரு பம்மாத்து அறிக்கை விட்டிருக்கிறார் ரஜினி..
கமல் அமெரிக்காவில் இருந்து திரும்பி, பேச்சுக்களை நடாத்தி, கதைக்கு பங்கமில்லாமல் தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என்று வழிகாட்டியிருக்கிறார்.
ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா.. திருட்டு வி.சி.டி அமாவாசையை விட வேகமானது..
ரஜினியின் அறிக்கை கமலுக்கு மேலும் நெருக்கடியையும், தாமதத்தையும் கொடுத்திருக்கிறது.
ரஜினி நடிக்க இருந்து பின் அவர் நடிக்காது சரத்குமார் நடித்து வெளியான ஜக்குபாய் வெளி வரமுன்னர் திருட்டு வி.சி.டி வந்ததே.. என்ன நடந்தது..
பேசிச் செய்ய முடிந்ததா..?
இல்லை..!!
நிமிடத்துளிகள்தான் இதில் விளையாடுகிறது..
இதெல்லாம் ரஜினிக்கு தெரியும், தான் சும்மா இருந்துவிட்டேனே என்று மற்றவர் குறை கூறுவர் என்பதற்காக ஒரு நாடக வேடமிட்டிருக்கிறார்..
ஊரோடு ஒத்துப் போவதுதானே முறை என்று ரஜினி சொன்னதாக கோடம்பாக்கத்தில் ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
திரையுலகைச் சேர்ந்த மற்றய நடிகர்கள் உறைந்து கிடக்கிறார்கள், அடுத்த திரைப்பட்த்தில் பஞ்ச் வசனம் பேச தொண்டையை செருமுகிறார்கள்.
கமல் இனியும் தொலைக்காட்சிகளில் வந்து இந்த நடிகர்களை நண்பர்கள் என்று கூறினால் அதன் அர்த்தம் அதுவாக இருக்காது.
சரி இந்த இக்கட்டான நிலையில் தமிழக மக்கள் என்ன செய்கிறார்கள்…
சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரையே கோயிலில் பிச்சையெடுக்க வைத்து மேலுலகம் அனுப்பிய மக்கள்தானே.. அவர்களுக்கு கமல் எம்மாத்திரம்…
சினிமா பைத்தியம் என்று பட்டம் கேட்டு, படத்திற்கு தடையையும் சந்தித்த கமல் பொருளாதார ரீதியாக தோல்வியடையலாம்…
விஸ்வரூபம் தரம் குன்றிய படமாகவும் இருக்கலாம்…
ஆனால்
உலக நாயகன் என்ற பெயரை பெறும் போட்டியில் கமல் வென்றுவிட்டார்..
இன்று பலத்த பிரசவவலியுடன் அவர் உலக நாயகனாக பிறந்திருக்கிறார்..
திரைப்படங்களை காண்பித்து புகழடைபவர்கள் சாதாரண கலைஞர்கள் அதை காண்பிக்க வழியின்றி புகழடைவோர் மாபெரும் கலைஞர்கள்..
முகமது கேலிச்சித்திரங்களை வரைந்தது தவறு என்று தெரிந்தாலும், கருத்துச் சுதந்திரத்தை காக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கோடான கோடி இழப்பை சந்தித்த சின்னஞ்சிறிய டென்மார்க்கின் கதையை இந்த நிகழ்வுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.
அன்று ஏ.. தாழ்ந்த தமிழகமே என்று பேரறிஞர் அண்ணா ஏன் சொன்னார் என்று யோசித்தோம்.. இன்று அண்ணா தீர்க்கதரிசிதான் என்று ஒப்புக் கொள்ள இதைவிட வேறென்ன ஒப்புமை வேண்டிக் கிடக்கிறது..?
அலைகளுக்காக கி.செ.துரை 25.01.2013 வெள்ளி மாலை

0 comments:

Post a Comment