உண்மைசுடும்

Sunday, 9 September 2012

WHO IS THE HERO! WHO IS THE HERO! காக்க வந்த வாத்தியாரோ!


Sep 08: சிவகாசி  அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு, நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார். 

இந்த சிகிச்சைக்கு ரூபாய் 25 லட்சம் செலவாகும்.  மலையாள நடிகர்  மம்முட்டியை பாராட்டியே ஆகவேண்டும். நம்ம தமிழ்நாட்டு நடிகர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. 

கும்பகோணம் தீவிபத்தில் பலியான பள்ளி குழந்தைகள் குடும்பங்களுக்கு நிதி வழங்குவதாக அறிவித்தநமது நடிகர்கள் பலர் மாயமானார்கள்தலைவா உன் சொல்லுக்காக தமிழகமே காத்து நிற்கிறதுஎன்று மிகைபடுத்தப்பட்ட ரஜினி என்ன செய்தார்? மற்ற நடிகர்கள் எல்லாம் எங்கே?  இதுபோன்ற பெரும் விபத்துகளிலும், பேரிடர்களிலும் இந்த நடிகர்களின் பங்கு என்ன?

சிடி பிளையர் வாங்க வசதியில்லாத இந்த அன்றாடம் காட்சிகள் தியேட்டரில் சென்று படம்பார்த்துதானே நீங்கள் எல்லாம் வாழ்கிறீர்கள். ஒரு மனிதனுக்கு 5 கார், 10பங்களா, ஒரு தலை முறைக்கு சொத்து இதல்லாம் போதும் தானே. இது போக மீதத்தையாவது மக்களுக்கு கொடுங்கலேண்டா! ஏன் இந்த பணவெறி.. பணவெறி.. பணவெறி டா!. 

இந்த கம்பம் கலி தின்னவனும் மண்ணுக்குள்ளே! அந்த தங்க பஷ்ப்பம் தின்னவும் மண்ணுக்குள்ளே!  நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல!  

இது ரஜினி காந்த் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை இவர்தான் முணு முணுப்பார். நம்ம விசிலடிச்சான் குஞ்சிகள் எல்லாம் ஓ.. தங்க தலைவா! வருங்கால தமிழக முதல்வரே! என்று கோசம் எழுப்புவார்கள். இதில் வேடிக்கை என்ன வென்றால் ரஜினி ரசிகர்கள்  கட்டவுட்டுக்கு பாலை ஊற்றி அபிசேகம் செய்வர். ஆனால் தமிழ்நாட்டில் எத்தனை பச்சிளம் குழந்தைகளுக்கு பால்வாங்க  வழியில்லாமல் தாய்மார்கள்   அவதிப்படுகிறார்கள். 

பாரதியும், பெரியாரும் வாழ்ந்த மண்ணில் மானம் கெட்டு குஷ்புக்கு கோவில் கட்டிய ரசிக பெருமக்கள்தானே. குஷ்பு தன்னை போலவே எல்லோரும் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ் நாட்டு பெண்களின் கற்ப்பை பற்றி பேசி சர்ச்சை உண்டாக்கினார். இந்த  குஷ்பு கடவுள் இந்த மக்களுக்கு ஏதாவது பண்ண போறாரா? இல்லையே! இதையெல்லாம் சிந்திக்க கூட வழியில்லாமல் நமது தமிழ் சமூகம் அடிமுட்டாளாகி போனது.
சினிமாவை பற்றியே செய்திகள் எழுதி சமூக வலைத்தளங்களை நாறடிக்கும் மக்கள் திருந்துவார்களா? 
*மலர்விழி*

1 comments:

ARIVU KADAL said...

நம் தமிழ் நாட்டு நடிகர்கள் அனைவரும் உணரவேண்டிய கருத்து. என்னை வாழ வைத்தது தமிழ் நாடு என்று சினிமாவில் சொன்னால் மட்டும் போதாது, வாழ வழியின்றி தவிக்கும் இம்மக்கள் வாழ உதவிபுரிய முன்வரவேண்டும் இடர் நேரும் காலங்களில் கூப்பிடாமல் ஓடோடி உதவிபுரிய வேண்டும். இல்லை என்றால் வாழவைத்தவர்களுக்கு வாய்க்கரிசி போட்டதற்கு சமம.

மலர்விழி அவர்களே அனைத்து மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டிய அருமையான பதிவு.

Post a Comment