மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை!

இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக விமானிகள் மற்றும் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்காததால் பெரும்பான்மையான விமானிகள் பணிக்கு வரவில்லை. இதனால் இந்த மாதம் 1 ம் தேதி முதல் கிங் ஃபிஷர் நிறுவனம் விமானங்களை இயக்கவில்லை.
இந்நிலையில் விமானங்களை இயக்காதது குறித்து விமான போக்குவரத்து ஆணையம் விளக்கம் கோரியிருந்தது. இதற்கு கிங் ஃபிஷர் நிறுவனத்தின் விளக்கம் திருப்தி அளிக்காததால் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் விஜய் மல்லையா கொடுத்த கிட்டத்தட்ட இருபது லட்சம் டாலருக்கான காசோலைகள் அவரது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால் திருப்பி வந்த விவகாரம் தொடர்பில் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் தொடுத்துள்ள வழக்கின் பேரில் விஜய் மல்லையாவுக்கு தென்னிந்திய நீதிமன்றம் ஒன்று பிடிவாரண்டு பிறபித்து இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment