இன்றைய தேவை வல்லரசா? நல்லரசா?

* இனிமேல் என்ன? நாம வல்லரசு ஆயாச்சி, இனி ரேசன் கடை கியூவில் கால்கடுக்க நிக்க வேண்டாம். அரசே ரேசன் பொருட்களை வீடுகளுக்கு டோர் டெலிவரியில் கொடுத்துவிடும்.
* பெண்கள் குடிதண்ணீர் வரவில்லையே என்று கவலைப்பட வேண்டாம், இனிமேல் குடிநீர் குழாயை திறந்தாள் தண்ணீருக்கு பதிலா பாலும், தேனும் வரும் நீங்கள் அள்ளி பருகலாம்.
* கேஸ் விலை கூடிவிட்டதே என்று இல்லத்தரசிகள் கவலைப்பட வேண்டாம். மூன்று வேலை உணவும் உங்கள் வீடுதேடிவரும், இனி வீடுகளில் நீங்கள் சமைக்க தேவையில்லை.
* மின்சாரம் இல்லாமல் தவிக்க வேண்டாம், இனி மின்வெட்டு என்பதே இருக்காது. மன்மோகன் சிங் வீட்டில் சுவிட்ச் போட்டால், உங்கள் வீடுகளில் லைட் எறியும்.
* இனிமேல் அவசர மருத்துவ உதவிக்கு போன் செய்தால், ஆம்புலன்ஸ் வேனுக்கு பதில் ஹெலிஹாப்ட்டர் வரும், உயர் தரம் வாய்ந்த மருத்துவ மனைகளில் உங்களுக்கு சிகிச்சை கொடுக்கப்படும்.
* காவேரி நதிநீர் கேட்டு நீங்கள் நீதிமன்றங்களை அணுக வேண்டாம், இனிமேல் காவேரி நதிநீர் உங்கள் கொல்லைபுறம் வழியாக பெருக்கெடுத்து ஓட அரசே வழிவகை செய்யும்.
* இனிமேல் நீங்கள் கம்மாகரையிலும், காடுகளிலும் மலம் சலம் கழிக்க ஒதுங்கவேண்டாம், உங்கள் வீடுகள் தோறும் அரசே அதிநவீன கழிப்பறைகளை கட்டி கொடுக்கும்.
* பிள்ளைகளை படிக்க வைக்க இனி நீங்கள் செலவு செய்யவேண்டாம், அதை அரசே செய்யும், எல்லோருக்கும் கல்வி இலவசமாகும், இனியாரும் கல்வியை காசுக்கு விற்க முடியாது என்ற நிலை உருவாகும்.
ஏவுகணை விட்டாச்சி, வல்லரசு ஆயாச்சி! இனிமேல் என்ன? மக்களுக்கு எல்லாம் கிடைக்கும். இந்தியா ஒளிர்கிறது நம்புங்கள்.
சிந்தியுங்கள்: எது மகிழ்ச்சி கொடுக்க கூடியது? பலத்த பாதுகாப்பா? வளமான வாழ்வா?
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.
0 comments:
Post a Comment