உண்மைசுடும்

Friday, 25 January 2013

விஸ்வரூபத்தின் விஸ்வரூபம் (காணொளி)


நாளை பாண்டி பஜாருக்கு விஸ்வரூபம் திருட்டு வி.சி.டி வந்துவிடும் என்ன செய்யப்போகிறீர்கள்..?
kamal rajini This video is for the Vishwaroopam protestersதியேட்டரில் பார்த்தால் மட்டும் களங்கம் திருட்டு வி.சி.டியில் பார்த்தால் களங்கமில்லையா..?
இன்று அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் விஸ்வரூபம் வெளிவருகிறது, என்றால் என்ன அர்த்தம்..?
நாளை விடிந்தால் பாண்டி பஜாருக்கு விஸ்வரூபம் திருட்டு வி.சி.டி வந்துவிடும், எப்படித் தடுக்கப் போகிறது தமிழக அரசு..?
சொற்ப நேரத்தில் இணையத்தில் முழுமையான திரைப்படமும் திருட்டுத் தனமாக தரவேற்றம் செய்யப்பட்டுவிட வாய்ப்புள்ளது..
இஸ்லாமிய அமைப்பக்களின் மனம் திருட்டு வி.சி.டியாலும், திருட்டு இணைய வெளியீட்டாலும் புண்படாது.. தியேட்டரில் காண்பித்தால் மட்டும்தானா புண்படும:..? நெஞ்சைத் தொட்டு இந்தக் கேள்வியைக் கேட்க தமிழகத்தில் ஒரு நாதி இல்லாத காரணத்தால் வெளி நாட்டிலிருந்து நாம் கேட்கிறோம்..
விஸ்வரூபத்தை தடுக்க முன் இஸ்லாமிய சகோதர அமைப்புக்களும், அவர்களுடைய பேச்சைக் கேட்டு முடிவெடுத்த தமிழக முதல்வரும் இந்த இரண்டு கேள்விக்கும் விடை தேடியிருக்க வேண்டும்.
மனச்சாட்சிப்படி சரியான பதிலை கண்டுவிட்டு திரைப்படத்தை நிறுத்த முன் வந்திருக்க வேண்டும்..
இன்று திரைப்பட வர்த்தகம் என்பது வெள்ளி, சனி, ஞாயிறு என்று மூன்று நாட்களுக்குள் நடந்து முடியும் வர்த்தகமாகிவிட்டது, தாமதித்தால் திங்கள் திருட்டு வி.சி.டி வந்துவிடும், அதனால்தான் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் ஒரே நேரத்தில் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.
இப்படியிருக்க தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட கடைசி நேர தடையால் கமலுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதைத் தவிர வேறு என்ன இலாபம் கிடைத்துள்ளது என்று கேட்டால் பதில் பூஜ்ஜியமே..
முன்னையை விட அதிகமானவர்கள் திருட்டு வி.சி.டியில் விஸ்வரூபத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறார்கள், கடைசியில் யானை தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்ட வேலையைத்தான் தமிழக அரசு செய்ததாக முடிந்திருக்கிறது.
ரஜினி வெளியிட்ட அறிக்கையில் செலவான பணம் தனது நெஞ்சை நடுங்க வைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கமலின் காரியாலயத்திற்கு படையெடுக்கும் கந்து வட்டிக்காரர் பற்றிய செய்தியைத்தான் அவருடைய நடுக்கம் தெரிவிக்கிறது போலும்..
100 கோடிக்கு நாளாந்த கந்துவட்டி என்ன.. அந்த வட்டி தாமதமாவதால் பெருகும் கடப்பாரை வட்டி என்ன..?
இப்படியான திரைப்பட வெளியீடு ஒரு நாள் தாமதித்தாலே போதும் விட்ட பணம் காற்றில் மாயமாகிவிடும்.
இது தெரியாதது போல ஒரு பம்மாத்து அறிக்கை விட்டிருக்கிறார் ரஜினி..
கமல் அமெரிக்காவில் இருந்து திரும்பி, பேச்சுக்களை நடாத்தி, கதைக்கு பங்கமில்லாமல் தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என்று வழிகாட்டியிருக்கிறார்.
ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா.. திருட்டு வி.சி.டி அமாவாசையை விட வேகமானது..
ரஜினியின் அறிக்கை கமலுக்கு மேலும் நெருக்கடியையும், தாமதத்தையும் கொடுத்திருக்கிறது.
ரஜினி நடிக்க இருந்து பின் அவர் நடிக்காது சரத்குமார் நடித்து வெளியான ஜக்குபாய் வெளி வரமுன்னர் திருட்டு வி.சி.டி வந்ததே.. என்ன நடந்தது..
பேசிச் செய்ய முடிந்ததா..?
இல்லை..!!
நிமிடத்துளிகள்தான் இதில் விளையாடுகிறது..
இதெல்லாம் ரஜினிக்கு தெரியும், தான் சும்மா இருந்துவிட்டேனே என்று மற்றவர் குறை கூறுவர் என்பதற்காக ஒரு நாடக வேடமிட்டிருக்கிறார்..
ஊரோடு ஒத்துப் போவதுதானே முறை என்று ரஜினி சொன்னதாக கோடம்பாக்கத்தில் ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
திரையுலகைச் சேர்ந்த மற்றய நடிகர்கள் உறைந்து கிடக்கிறார்கள், அடுத்த திரைப்பட்த்தில் பஞ்ச் வசனம் பேச தொண்டையை செருமுகிறார்கள்.
கமல் இனியும் தொலைக்காட்சிகளில் வந்து இந்த நடிகர்களை நண்பர்கள் என்று கூறினால் அதன் அர்த்தம் அதுவாக இருக்காது.
சரி இந்த இக்கட்டான நிலையில் தமிழக மக்கள் என்ன செய்கிறார்கள்…
சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரையே கோயிலில் பிச்சையெடுக்க வைத்து மேலுலகம் அனுப்பிய மக்கள்தானே.. அவர்களுக்கு கமல் எம்மாத்திரம்…
சினிமா பைத்தியம் என்று பட்டம் கேட்டு, படத்திற்கு தடையையும் சந்தித்த கமல் பொருளாதார ரீதியாக தோல்வியடையலாம்…
விஸ்வரூபம் தரம் குன்றிய படமாகவும் இருக்கலாம்…
ஆனால்
உலக நாயகன் என்ற பெயரை பெறும் போட்டியில் கமல் வென்றுவிட்டார்..
இன்று பலத்த பிரசவவலியுடன் அவர் உலக நாயகனாக பிறந்திருக்கிறார்..
திரைப்படங்களை காண்பித்து புகழடைபவர்கள் சாதாரண கலைஞர்கள் அதை காண்பிக்க வழியின்றி புகழடைவோர் மாபெரும் கலைஞர்கள்..
முகமது கேலிச்சித்திரங்களை வரைந்தது தவறு என்று தெரிந்தாலும், கருத்துச் சுதந்திரத்தை காக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கோடான கோடி இழப்பை சந்தித்த சின்னஞ்சிறிய டென்மார்க்கின் கதையை இந்த நிகழ்வுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.
அன்று ஏ.. தாழ்ந்த தமிழகமே என்று பேரறிஞர் அண்ணா ஏன் சொன்னார் என்று யோசித்தோம்.. இன்று அண்ணா தீர்க்கதரிசிதான் என்று ஒப்புக் கொள்ள இதைவிட வேறென்ன ஒப்புமை வேண்டிக் கிடக்கிறது..?
அலைகளுக்காக கி.செ.துரை 25.01.2013 வெள்ளி மாலை

Friday, 4 January 2013

90 வயதிலும் பொய்யான சூளுரை!

Jan 04: நடக்க இருக்கும் திமுக  உட்கட்சித் தேர்தலில், தி.மு.க., தலைவர் பதவிக்கு, ஸ்டாலின் போட்டியிடுவதாக இருந்தார். இவரது எண்ணத்திற்கு  கருணாநிதி முற்றுப்புள்ளி வைத்தார். 

ஸ்டாலினுக்கு இப்போதைக்கு தலைவர் பதவி இல்லை. வாழ்நாள் முழுவதும், தமிழ் சமுதாய  மேன்மைக்காக நான் பாடுபடுவேன் எனக்கு பின், ஸ்டாலின் பாடுபடுவார் என கருணாநிதி அறிவித்தார்.

சிந்திக்கவும்: பண்டாரம் பரதேசியாக அரசியலுக்கு வந்து தமிழ் நாட்டை கொள்ளையடித்து ஆசிய பெரும் பணக்கார்கள் வரிசையில் வந்து விட்டது கருணாநிதியின் குடும்பம். 

ஜூன் 3ம் தேதி,தனது 90வது பிறந்த நாளை கொண்டாடும் கருணாநிதிக்கு ஒருபுறம் தலைவர் பதவியை விட்டு விலக மனதில்லை. மறுபுறம் தான் தலைவர் பதவியை விட்டு விலகினால் தன் கண்ணெதிரேயே திமுகவில் உள்கட்சி சண்டை வந்து உடைந்து போகும் நிலை வரலாம். இதை எல்லாம் தான் உயிரோடு இருக்கும் போது பார்க்க வேண்டாம் என்று நினைக்கிறார் தமிழ் ஈனத்தலைவர் கருணாநிதி. 

தனது மகன்கள் தன் கண்ணெதிரேயே சண்டையிட்டு கட்சி உடைத்து விடகூடாது,  தான் சந்தோசமா பதவியோடு எந்த பிரச்சனைகளையும் பார்க்காமல் போயி சேரவேண்டும். அதனால்தான் தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் சமுதாய மேன்மைக்காக பாடுபடுவேன் என்று சொன்னது.  அதற்கும், இவருக்கு பயன்படுவது தமிழும், தமிழ் மக்களும்தான். 

தமிழ், தமிழ் சமுதாயம் என்று சொல்லி அரசியல், அதிகாரம், பணம், என்று எல்லா வளங்களையும் பெற்றவர். ஆனால் அந்த தமிழர்களுக்காக தனது வாழ்நாளில் எதையாவது உண்மையாக செய்யவேண்டும் என்று நினைத்தாரா என்றால் இல்லை என்றே சொல்லலாம். தன்னையும் தனது குடும்பத்தையும் வளப்படுத்தி கொள்ள நல்ல அரசியல் நடத்தினார்.

தமிழகம் சந்தித்த மிக கேவலமான அரசியல் தலைவர்களுள் இவரும் ஒருவர்.

பாலியல் வன்புணர்வை வைத்து அரசியல்!


Jan 01: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம்  அடைந்த மாணவியை வைத்து நன்றாக அரசியல் நடத்துகிறார்கள் ஒட்டு பொருக்கி அரசியல் கட்சியினர்.

பயனற்ற அறிவிப்புக்கள்: 1) பலாத்காரத்துக்கு ஆளான டில்லி மாணவி உயிரிழந்ததை அடுத்து, புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்வதாக ராணுவம் அறிவித்துள்ளது.

2) பலாத்காரத்துக்கு ஆளான டில்லி மாணவி உயிரிழந்ததை அடுத்து, குடியரசு தலைவரின் புத்தாண்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

3) பலாத்காரத்துக்கு ஆளான டில்லி மாணவி உயிரிழந்ததை  அடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதுவும் இல்லை  என்று சோனியா அறிவித்துள்ளார். 

* நீங்கள் புத்தாண்டு கொண்டாடினால் என்ன! கொண்டாடாமல் போனால் என்ன!  உருப்படியாக எதையாவது செய்வதை விட்டு நீலி கண்ணீர் வடிப்பதேன்*
*******************************
பயனுள்ள சில அறிவுப்புகள்: 1)  பஞ்சாப்பில், விசாரணை என்ற பெயரில் இனி பெண்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தக் கூடாது என அம்மாநில முதல்வர், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்

2). ஆபத்தில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கான அவசர உதவி சேவை மையத்தை உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே துவக்கியுள்ளார். மும்பை, புனே, நாசிக் போன்ற நகரங்களில் ஆண்டு முழுவதும் 24 மணி நேர சேவையாக இந்த மையம் செயல்படும்

3). பாலியல் வன்முறை வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகள் ஆகியவற்றை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். விரைவில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் வகையில், தொடர்ச்சியாக தினசரி வழக்குகளை நடத்தி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
*******************************
சிந்திக்கவும்: இந்திய பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பாலியல் வன்புணர்வு செய்பவர்கள் வழக்கை ஒரு மாதத்துக்குள் விசாரித்து மரணதண்டனை வழங்க வேண்டும். அதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். 

இதில் சாதாரண குடிமகன் முதல் ராணுவம், போலீஸ், எம்.பி., எம்.எல்.ஏ. யாராக இருந்தாலும் நீதி ஒரே சமநிலையில் பேணப்பட வேண்டும். பாலியல் வன்புணர்வு வழக்குகளை விசாரிக்க தனியாக ஒரு துறை அமைக்கப்பட வேண்டும். அந்த துறை முற்றிலும் நேர்மையான அதிகாரிகளை கொண்டு நிரப்பப்பட வேண்டும். அந்த துறையின் நடவடிக்கைகளில் தலையிட அரசியவாதிகளுக்கோ, அதிகாரம் படைத்தவர்களுக்கோ உரிமை அளிக்கப்பட கூடாது. 

இப்படி ஒரு துறையை அமைத்து பாலியல் வன்புணர்வில் ஈடுபடும் கயவர்களை ஒரு மாதத்திற்குள் மரணதண்டனை விதித்தால் இனி ஒரு கயவனும் பெண்களை இதுபோன்ற எண்ணத்தில் பார்க்க பயப்படுவான். ஈழத்திலே, காஷ்மீரிலே, சத்தீஸ்கரிலே பெண்களை கற்பழித்த இந்திய இராணுவத்தினர், காவல் நிலைய கற்பழிப்புகளை நடத்திய இந்திய காவல்துறையினர் இவர்களின் பெயர்களை பெட்டியலிட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகளை மீள் விசாரணை செய்து தண்டிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் நீதி முறையாக செயல்படுகிறது என்கிற நம்பிக்கை ஒவ்வொரு குடிமகனுக்கும் வரும். 

இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளி! உதயகுமார்!


Jan 02: NCHRO  (National Confederation of Human Rights Organisations) வழங்கும் இந்தியாவின் மிக சிறந்த மனித உரிமை போராளிகளுக்கான முகுந்தன் சி மேனன் நினைவு விருதை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்டத்தின் தலைவர் டாக்டர் உதயகுமார் பெறுகிறார்.

யார் இந்த முகுந்தன் C மேனன்: இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளியான இவர் 1948 ஆம் ஆண்டு இவர் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் செண்பகாசேரி என்கிற ஊரில் பிறந்தார். டெல்லியில் பத்திரிக்கையாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டு மனம் வருந்தினார். அதற்க்கெதிராக தனது வாழ்க்கையின் 35 வருடங்களை செலவிட்டு பின்னர் இயற்க்கை எய்தினார். 
 
அவர் ஆற்றிய பணிகள்: இவர்  PUCL (People's Union for Civil Liberties), மற்றும் NCHRO (National Confederation of Human Rights Organisations), KCLC ( Kerala Civil Liberties),  போன்ற மனித உரிமைகள் இயக்கங்களில் முக்கிய தலைவராக இருந்து பணியாற்றினார். டெல்லியில் பத்திரிக்கையாளராக 1970 இல் செயல்பட்டார். இந்திய பத்திரிக்கைகளான தேசஜஸ் மற்றும் மில்லி ஹெஜட் போன்ற பத்திரிக்கைகளிலும் அல்ஜெசிரா போன்ற வெளிநாட்டு தொலைகாட்சியிலும் ஜெர்னலிஸ்ட் ஆக பணியாற்றினார்.
 
முகுந்தன் சி. மேனன் விருது: மறைந்த இவரது நினைவாகத்தான் ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளிகள், மனித உரிமை ஆர்வலர்கள் , சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என NCHRO அமைப்பு சார்பாக  ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு  சிறந்த மனித உரிமை போராளிகான விருது கூடங்குளம் போராட்டத்தை வழி நடத்திவர்களில் ஒருவரான டாக்டர் எஸ்.பி.உதயகுமார் அவர்களுக்கு  வழங்கப்பட இருக்கிறது . ரூ 25000 ரொக்க பரிசுடன் விருதுதும் சான்றிதழ்களும் வழங்ப்பட உள்ளது.
 
இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளியாக விளங்கிய  முகுந்தன் C மேனன் அவர்களை ஆசிரியர்கள் குழு சார்பாக நினைவு கூர்வதில் பெருமிதம் கொள்கிறோம். அரசு பயங்கரவாதத்தால்  பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு நீதி கிடைக்க  35 வருடகாலம் அயராது உழைத்தவர். மற்றைய மனித உரிமை ஆர்வலர்களுக்கும், நமக்கும் பெரும் முன்மாதிரியாக திகழ்ந்தவர்.
 
நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.